கயத்தாறில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 24 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.250-ஐ பறிமுதல் செய்தனர்.
கயத்தாறு காவல் உதவி- ஆய்வாளர் முத்துமாரி தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை சன்னதுபுதுக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதி பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த சு.சுடலைமுத்துவை (50) கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 11 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.100-யை பறிமுதல் செய்தனர்.
அதுபோல, ராஜாபுதுக்குடி பகுதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் கண்ணனை (50) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.150-யை போலீஸார் பறிமுதல் செய்தனர்.