கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக நகரச் செயலர் கருணாநிதி தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தலைமைக் கழகப் பேச்சாளர் சரவெடி சரத்பாலா ஆகியோர் பேசினர்.
இதில், மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட துணைச் செயலர் ஏஞ்சலா, நகர துணைச் செயலர் காளியப்பன், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், பரமசிவம், மாவட்டப் பிரதிநிதிகள் ரவீந்திரன், விஸ்வராஜ் , நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு செயலர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.