தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 22) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி 4ஆவது பைப்லைன் திட்டத்தில் உள்ள கலியாவூர் தலைமை நீர் பணியிடம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சனிக்கிழமை (செப். 22) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் மக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றார் அவர்.