நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் தயாரித்த குறும்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தயாரித்த "ஐ அம் ஹங்ரி' மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் தயாரித்த "த கோல்டு பிரேம்' ஆகிய குறும்படங்கள், கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியின் சமூக மற்றும் ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
இதில் "ஐ ஆம் ஹங்ரி' என்ற படம் சிறப்பு குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. பரிசு பெற்ற மாணவர்கள் ஜெ. ஜெயா, அன்டனி, ஜெ. டேவிட் லிவிங்ஸ்டோன், ஐ. டேவிட் அருள்ராஜ், சி. ஜெய பிரகாஷ் ஆகியோரை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, துறைத் தலைவர் ஆர்.எம். வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.