தூத்துக்குடி கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் பாரத ரத்னா காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றின் கல்வி முகமையான, தூத்துக்குடி கல்விக் குழுவின் பொதுக்குழு மற்றும் ஆட்சிக் குழு கூட்டம் தலைவர் வெ. இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின்போது, 2018-2021 ஆம் ஆண்டுக்கான தலைவராக வெ. இளங்கோவும், துணைத் தலைவராக பி.எஸ்.எஸ்.ஜி. திவாகரும், செயலராக ஆ. ராஜேந்திரனும், இணைச் செயலராக ஜெ. மோகன்ராஜியும், பொருளாளராக எம். எஸ். பழனிமுத்துவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், கல்விக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சு. முத்துச்செல்வம், அமர்நாத், சோமு, நடராஜன், சந்தனராஜ், ஆனந்தராஜ், நாகராஜன், மதியழகன், ராமச்சந்திரன், ராஜேந்திரன், ராஜசேகரன், சொக்கலிங்கம், மகேந்திரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜன், சுயநிதிபாடப்பிரிவு இயக்குநர் ஏ.எம்.டோனி மெல்வின், காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கார்மெல் சுமிதா ஆகியோர் கல்லூரி, சுயநிதிபாடப்பிரிவு மற்றும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள், திட்டங்கள் குறித்த அறிக்கையையும், வருங்கால திட்ட அறிக்கையையும் விரிவாக எடுத்துரைத்தனர்.