கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 15) மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.15) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.