சாத்தான்குளம் வட்டார அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் செஸ் கழகத்தின் சார்பில், ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் தொழில்பயிற்சி பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டிக்கு, சாத்தான்குளம் வட்டார செஸ் கழகச் செயலர் வழக்குரைஞர் ஆரோன்டேவிட் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்ததார். 9,11,13, 17 ஆகிய வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவர்களாக கற்பகவள்ளி, சொக்கலிங்கம் ஆகியோர் பணியாற்றினர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்- மாணவிகளுக்கு சாத்தான்குளம் வட்டார செஸ் கழகத் தலைவர் பத்மினி ஆரோன் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். செஸ் கழக இணைச் செயலர் லாசர், பொருளாளர் ராஜேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.