முருகன் கோயிலில் பச்சை சாத்தி சிறப்பு பூஜை

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பேய்க்குளம் அருள்மிகு

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
இதையொட்டி, கோயிலில்  திருச்செந்தூரில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 11வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பச்சை மலரால்  சிறப்பு அலங்காரத்தில்  ஸ்ரீகாவடி பிறை முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
பின்னர் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com