குரும்பூரில் புதிய வாரச் சந்தை தொடக்கம்

குரும்பூரில் புதிய வாரச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 

குரும்பூரில் புதிய வாரச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. 
குரும்பூர் ஏ1வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தக்கார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் புதிய வாரச் சந்தையை தொடங்கிவைத்தார். சிவத்தையாபுரம் இந்து நாடார் உறவின்முறை தர்மகர்த்தா அச்சுதன், பேரின்பவிலாஸ் ரவிகுணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலர் பாலம் ராஜன், பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப் பள்ளிச் செயலர் சுப்பு, காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருநீலகண்டன், வீரமாணிக்கம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தர், குரும்பூர் ஜமாஅத் தலைவர் ஷேக் பரிசு, நல்லூர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com