சாத்தான்குளம் நூலகத்தில் உலக தாய்மொழி தினம்

சாத்தான்குளம் அரசு கிளை  நூலகத்தில் சிகரம் அறக்கட்டளை, வாசகர் வட்டம் சார்பில் உலக தாய்மொழி தினம்  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

சாத்தான்குளம் அரசு கிளை  நூலகத்தில் சிகரம் அறக்கட்டளை, வாசகர் வட்டம் சார்பில் உலக தாய்மொழி தினம்  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர்  ஓ.சு. நடராஜன் தலைமை வகித்தார். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலர் மகா. பால்துரை, சிகரம் அறக்கட்டளை இயக்குநர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில், சாத்தான்குளம் அஞ்சல அதிகாரி ஜான், பங்கேற்றுப் பேசினர். இதைத்தொடர்ந்து தாய்மொழி சிறப்பை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதில், யோகா ஆசிரியை ராஜலெட்சுமி, பிரேம்குமார், கேரனாலிதியா, பிரிதி ,சுஜி, சக்திவேல், நாகராஜன், ராமசந்திரன், மாணவர்கள் கலந்து கொண்டனர். நுலகர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com