சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 6 பேரை போலீஸார் தேடி  வருகின்றனர்.  


சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக 6 பேரை போலீஸார் தேடி  வருகின்றனர்.  
சாத்தான்குளம் அருகேயுள்ள தேர்க்கன்குளத்தைச் சேர்ந்த பாதாளம் மகன் இசக்கிமுத்து (30). இவரது நண்பர் கோபால் மகன் முண்டசாமி (32). இருவரும்  வெள்ளிக்கிழமை பைக்கில் வெளியூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினராம்.
அப்பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயில் அருகே  வரும்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த உத்திரம் மகன்கள் இசக்கி, மணிகண்டன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் வழிமறித்து இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனராம். பலத்த காயமடைந்த இசக்கிமுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்  ராஜாசுந்தர் வழக்குப் பதிந்து, இசக்கி, மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com