திருச்செந்தூரில் நாளை தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

திருச்செந்தூரில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை (பிப். 25) நடைபெறுகிறது.


திருச்செந்தூரில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை (பிப். 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) செயலர் ராஜ்செல்வின் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் (துடிசியா) இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை (பிப். 25) காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள நியூ சிட்டி டவர் கட்டடத்தில் நடைபெறுகிறது.
சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com