பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெறுகிறது.
குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் 2ஆவது செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. தை பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.15) காலை 9 மணிக்கு பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5 மணிக்கு பொங்கலிலிடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன், சிற்பி கணேசன், நாசரேத் முத்துக்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.