ஆறுமுகனேரி பகுதியில் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்பு

ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி. காலனி, ஜெயின் நகர் பகுதியில் மர்ம காய்ச்சலிலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி. காலனி, ஜெயின் நகர் பகுதியில் மர்ம காய்ச்சலிலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுமுகனேரி பேரூராட்சி ஏ.ஐ.டி.யூ.சி. காலனியில் பிரதானத் தெரு, 1 முதல் 5 தெருக்கள், ஜெயின்நகரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இங்குள்ளவர்கள் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிசெய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு  மூட்டு வலிலியால் நடக்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். சுகாதாரப் பணியிலும் ஈடுபட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com