அரியலூர்
அரியலூரிலிருந்து நாகை புறப்பட்ட நிவாரணக் குழு
அரியலூர் மாவட்டத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நிவாரணக் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு சென்றனர்.
அரியலூர் மாவட்டத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நிவாரணக் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு சென்றனர்.
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சீரமைக்க அரியலூர் ஒன்றியத்தின் சார்பில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்ராஜா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மரங்களை அறுக்கும் 10 இயந்திரங்களுடன் வெள்ளிக்கிழமை இரவு நாகை மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களுடன் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சென்றனர்.
அங்கு மின்வாரியம் அடையாளப்படுத்தும் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.