அரியலூரில் மது அருந்திவிட்டு வரும் கணவரைப் பயமுறுத்தும் விதமாக தீ வைத்துக் கொண்ட பெண் காயமடைந்தார், குழந்தை இறந்தது.
அரியலூர் எத்திராஜ் நகரை சேர்ந்தவர் கதிரவன். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் விரக்தி அடைந்த இவரது மனைவி மீனா (24), வெள்ளிக்கிழமை இரவு தனது ஒரு வயது மகன் சந்திப்ரோஷனை இடுப்பில் சுமந்தபடி உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொள்வதாக கணவரைப் பயமுறுத்தும் போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற கதிரவனும் காயமடைந்தார்.
இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சந்திப்ரோஷன் சனிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.