மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்று செயல்படும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அனுமதியின்றி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.