அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள கோரைக்குழி காலனித் தெருவைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படித்த வந்த 13 வயது மாணவி சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (36) என்பவர் அவரை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா வழக்குப் பதிந்து பாண்டியனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.