அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அடுத்த காரைக்குறிச்சி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பழனியப்பன் தலைமையிலான போலீஸார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா (45) அப்பகுதியில் மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாதிக்பாட்ஷாவை கைது செய்த போலீஸார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.