சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபடுவோரை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார்

ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபடுவோரை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ்விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான விருது வழங்குவதற்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன்  31.10.2018-க்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com