மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கேபிள் டி.வி முகவர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கேபிள் டி.வி முகவர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர் அருகேயுள்ள வைப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் சிவா(30). இவர் கடந்தாண்டு லதா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கேபிள் டி.வி தொழில் நடத்தி வந்த இவர், செவ்வாய்க்கிழமை காலை கல்லக்குடி-வைப்பம் சாலையில் கேபிள் வயரை சரி செய்வதற்காக அங்குள்ள மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கையில் மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்ட சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லதா அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com