அரியலூர் ரயில் நிலைய பொறியாளர் அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினர் (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் துரைசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வகுமார் பேசினார்.