5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே 5 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை 

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே 5 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை உடையார்பாளையம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஜயங்கொண்டம் அருகே  காக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், தனது 5 வயது பெண் குழந்தையை தனது தாயாரின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளான். குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது தாத்தா வருவதையறிந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதுகுறித்து அறிந்த பெண் குழந்தையின் தந்தை உடையார்பாளையம்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய சிறுவனை திங்கள்கிழமை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறுவனை திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com