அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறையை சம்பவத்தை பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் கலைவாணனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் கருப்புத் துணியை கட்டி முழக்கமிட்டனர்.