அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நிறுவன மேலாண்மை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் எஸ்.சேகர், ஆலோசகர் தங்க. பிச்சையப்பா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கல்லூரி இயக்குநர் ராஜமாணிக்கம், இணைச் செயலர் எம்.ஆர். கமல்பாபு ஆகியோர் வாழ்த்தினர். சென்னையிலுள்ள இந்திய மேலாண்மை நிர்வாக செயல்திறன் மையம் துணை இயக்குநர் சித்ரா அனந்தராமன் கலந்து கொண்டு, வணிகவியல் துறை மாணவ,மாணவிகள் கூடுதலாக வணிக மேலாண்மை நிர்வாக செயல்திறன் போன்ற பாடப்பிரிவுகளில் படித்து பயன் பெறுவது பற்றி விளக்கமளித்தார். துணை முதல்வர் சங்கீதா வரவேற்றார்.