அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா பருவச் சாகுபடியைக் கருத்தில் கொண்டு, மேலும் 6 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், மூன்றாவது கட்டமாக கீழகாவட்டாங்குறிச்சி, விளாகம், இலந்தைக்கூடம், பளிங்காநத்தம், கீழக்கொளத்தூர் மற்றும் கள்ளூர் ஆகிய 6 கிராமங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை (பிப்.18) திறக்கப்படவுள்ளன. எனவே, விவசாய பெருமக்கள், அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.