அரியலூர் : மேலும் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா பருவச் சாகுபடியைக் கருத்தில் கொண்டு,  மேலும் 6 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. 


அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா பருவச் சாகுபடியைக் கருத்தில் கொண்டு,  மேலும் 6 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. 
விவசாயிகள் பயன்பெறும் வகையில், மூன்றாவது கட்டமாக   கீழகாவட்டாங்குறிச்சி, விளாகம், இலந்தைக்கூடம், பளிங்காநத்தம், கீழக்கொளத்தூர் மற்றும் கள்ளூர் ஆகிய 6 கிராமங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை (பிப்.18) திறக்கப்படவுள்ளன. எனவே, விவசாய பெருமக்கள், அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com