அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் காலனித் தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(22).இவர் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம்.
மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
. இது குறித்து புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,கணேசமூர்த்தியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.