அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சனிக்கிழமை இரவு வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஜயங்கொண்டம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்(52) என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, லாட்டரிகளை பறிமுதல் செய்தனர்.