திருமானூரில் நாளை தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.22) முற்பகல் 11 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில், திருமானூர் சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களிடமிருந்து பதிவு விண்ணப்பங்கள், புதுப்பித்தல் விண்ணப்பங்கள் மற்றும் நல உதவி கேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.
இதில், கடைகள், நிறுவனங்களில் வேலை செய்வோர், தெருசுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள், நெசவுத் தொழில், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் உட்பட 60 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும், கட்டுமானம் சம்பந்தப்பட்ட கொத்தனார், சித்தாள், கம்பிக் கட்டுநர், பிளம்பர், பெயின்டர் உட்பட 53 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளோர், வீட்டு வேலை செய்வோர் உறுப்பினர்களாகச் சேரலாம். 18 வயது முதல் 60 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர்  உரிமம், 3 போட்டோ, செய்யும் வேலைக்கான உரிய பதிவு விண்ணப்பத்தில் பெறப்பட்ட தேதியுடன் விஏஓ கையொப்பம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com