இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நடைபெறவுள்ள மக்களவைத் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 01.01.2019-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று முடிந்த சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இயலாமல் விடுபட்டுபோன வாக்காளர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 23, 24-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.