குறிச்சிகுளம் திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன்  கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன்  கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக் கோயிலில் கடந்த 5 தேதி காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மக்கள் நலமுடன் வாழ  மகாபாரதம் பாடப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை  4 மணிக்கு திரெளபதியம்மன், காளியம்மன்  தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் தீமிதி திடல் அருகே வந்தவுடன் காப்பு  கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் தேரோடும் வீதிகள் வழியாக தேர் இழுக்கப்பட்டு இரவு 8 மணியளவில் நிலைக்கு வந்தது. பொதுமக்கள் மாவிளக்கு வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
குறிச்சிகுளம், அசாவீரன்குடிக்காடு, ஆர்எஸ் மாத்தூர், படைவெட்டி குடிக்காடு, நயினார்குடிக்காடு, கஞ்சமலைப்பட்டி, மாறாக்குறிச்சி ஆகிய ஏழு கிராம மக்கள் இணைந்து நடத்தும் திருவிழா என்பதால் சுமார் 7ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com