சிறப்பு கூடைப் பந்து போட்டியில்  வென்ற அணிக்கு பரிசளிப்பு

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிறப்பு கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டது. 

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிறப்பு கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டது. 
யூத் கூடைப்பந்து கழகம், டாக்டர் அப்துல்சாதிக் நினைவு கூடைப்பந்து கழகம், சிமென்ட் சிட்டி கூடைப்பந்து கழகம், லிங்கம் நினைவு கூடைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 5 அணிகளும் கலந்து கொண்டன. இதில் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு கூடைப்பந்து கழகம் முதலிடத்தையும்,சிமென்ட் சிட்டி கூடைப்பந்து கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. பரிசளிப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. அரியலூர் டி.எஸ்.பி மோகன்தாஸ், ஏ.எஸ் நர்சிங் ஹோம் மருத்துவர் அகமத் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். ஏற்பாடுகளை கூடைப்பந்து பொறுப்பாளர்கள் ஆர் பூமிநாதன், கே. சாமுவேல், தினேஷ்குமார், லூர்தீன்ராஜா, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com