அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே போலீஸாரிடம் சாட்சி சொன்னவரின் தாயைக் தாக்கிய 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
செந்துறை அடுத்த கீழமாளிகை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ந. கலியமூர்த்தி (70). விவசாயி. இவருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான முருகேசன் மகன் ஆனந்தனுக்கும் இடையே கடந்த ஆறு மாத காலமாக இடப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த நவம்பர் 10 ஆம் தேதி இவரை, ஆனந்தன், அவரது ஆதரவாளர்களான க. கலைச்செழியன், மா. சுப்ரமணியன் ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி மகன் நீதி, போலீஸாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செழியன், சுப்ரமணியன் ஆகியோர் நீதியின் தாய் கலைச்செல்வியை வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து நீதியை தாக்கிய கலைச்செழியன், சுப்ரணியனை சனிக்கிழமை கைது செய்தனர்.