க.பொய்யூர் அரசுப் பள்ளியில் பொங்கல் விழாவை கொண்டாடிய மக்கள்

அரியலூர் மாவட்டம், க.பொய்யூர்ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பொது மக்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், க.பொய்யூர்ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பொது மக்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில்  பங்கேற்ற பொதுமக்கள் புதுப்பானையில்,பொங்கல் வைத்து, பின்னர் மஞ்சள்,வாழைப்பழம், செங்கரும்பு வைத்து சூரியனுக்கு வைத்துப் படைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பொங்கலை வழங்கி,தாங்களும் சாப்பிட்டுமகிழ்ந்தனர்.விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு   அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் அரிசெல்வராஜ் பரிசுகளை வழங்கிப் பேசினார். 
அவர் தனது உரையில், இதுபோன்று  மற்ற கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளிலும் பொதுமக்கள் முன்னின்று பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்றார். 
அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்மையாள்,ராமச்சந்திரன் மற்றும் க.பொய்யூர் கிராம மக்கள் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com