அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுகன்யா தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். சுகாதார மேற்பார்வையாளர் பார்வதி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி, வட்டார திட்ட உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி,பிரதான சாலை வழியாகச் சென்று அரிலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை பருவத்தில் ஏற்படும் ரத்த சோகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.