மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
2019 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டதையடுத்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவரொட்டிகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.