எச்.ஐ.வி பாதித்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த எச்.ஐ.வி பாதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரு


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த எச்.ஐ.வி பாதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள காங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(24). திருமணமான இவருக்கு எச்.ஐ.வி பாதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த கிருஷ்ணகுமார் கடந்த வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிசிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com