பிளஸ் 2 மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மகள் தீபா(18). இவர், தத்தனூர் பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தையும் தான் படித்திருந்தும் மறந்து விடுவதாக பெற்றோரிடம் விரக்தியில் கூறி வந்த தீபா சனிக்கிழமை பூச்சிமருந்தைக் குடித்து விட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு  ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com