தேர்தல் நடத் தை விதிகள் அமலில் இருப்பதால், மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி மக்களவைத் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் கோரிக்கை மனுக்கள் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் அளிக்கும் பெட்டியில் போடலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.