மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மகாமாரியம்மன்

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மகாமாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்கூடைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள் மகாமாரியம்மனுக்கு அவைகளை அளித்து பூச்சொரிதல் விழா நடத்தினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் பூ ஆகியவற்றுடன் அன்னதானும் பிரசாதமாக  வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com