பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றியச்செயலர் கலைமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பத்மாவதி, மாவட்டத் தலைவர் பாக்கியம், அரியலூர் ஒன்றியச் செயலர் மலர்கொடி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.