பெங்களூருவில் தேசிய அளவிலான 36 ஆவது சீனியர் பிரிவு ஆண்களுக்கான நெட்பால் போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் உள்ள தமிழக ஆண்கள் பிரிவு அணிக்கான நெட்பால் பயிற்சி முகாம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் எம்ஆர் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பயிற்சி முகாமை தாளாளர் பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி பிரிவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியில் விளையாடக் கூடிய 12 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு தமிழ்நாடு நெட்பால் கழக பொது செயலாளர் பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், சதீஷ், ரகுபால் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.