அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளில் மதுபானம் விற்றதாக பெண் உள்பட 5 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,சோழமாதேவி,நாயகனைப்பிரியாள் பகுதியில் மதுபானம் விற்றதாக சுரேஷ் (33), விஜயா(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுபோல, ஆண்டிமடம் பகுதியில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த சேகர்(45),அந்தோணி இருதயராஜ்(35),அருள்தாஸ்(49) ஆகிய 3 பேரை ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.