கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை டிஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் ஆர். லலிதா லட்சுமி திங்கள்கிழமை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, அமைச்சு பணியாளர்கள் பிரிவு, தனிப்பிரிவு, ஒருவிரல் கைரேகைக் கூடம், தொழில்நுட்பப் பிரிவு மற்றும் புகைப்படப் பிரிவு ஆகிய இடங்களில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் தி.கி.ராஜசேகரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சி.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.