கரூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை (டிச. 19) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் தொடர்பான அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் தொடர்பான புகார்களை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை புகார்களாகத் தெரிவித்து பயன்பெறலாம் என இதுதொடர்பாக ஆட்சியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.