லாலாபேட்டையில் பேருந்து நிறுத்தத்தில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.