மயங்கி விழுந்த தபால்காரர் இறந்தார்.
கரூர் மண்மங்கலம் அடுத்த பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (56). இவர் அங்குள்ள தபால் நிலைய தபால்காரராக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை தபாலை எடுத்துக் கொண்டு ஆனூர் பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றபோது திடீரென சைக்கிளில் இருந்து விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரைஅக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுதொடர்பாக வாங்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.