தரகம்பட்டி சலூன் கடையில் செல்லிடபேசி திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தரகம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சங்கர் (25) அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் செவ்வாய்க்கிழமை முடி திருத்த வந்த கடவூர் அடுத்த குப்பாண்டியூரைச் சேர்ந்த சீரங்கன் மகன் ஆறுமுகம் (27) சங்கரின் செல்லிடபேசியை திருடிச் சென்றார். சிறிது நேரத்தில் செல்லிடபேசியை காணாததைக் கண்ட சங்கர், உடனே பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகத்திடம் விசாரித்தபோது அவர்தான் செல்லிடபேசியை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸில்அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.