மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி பெற வரும் 22-ல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் பெற இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள, கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 22-ம்தேதி நேர்முகத்தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்போர் தேசிய அடையாள அட்டை அசல், நகல், கல்வி பயிலும் அல்லது தொழில் புரியும் , வேலைக்கு செல்லும் அசல் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் முழுஉருவத்துடன்-1 போட்டோ ஆகிய சான்றுகளுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.