மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி பெற வரும் 22-ல் நேர்முக தேர்வு

மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி பெற வரும் 22-ல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.

மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி பெற வரும் 22-ல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ்  மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் பெற இரு கைகளும்  நல்ல நிலையில் உள்ள, கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 22-ம்தேதி நேர்முகத்தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்போர் தேசிய அடையாள அட்டை அசல்,  நகல்,  கல்வி பயிலும் அல்லது தொழில் புரியும் ,  வேலைக்கு செல்லும் அசல் சான்று,  குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை,  ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் முழுஉருவத்துடன்-1  போட்டோ ஆகிய சான்றுகளுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com