கரூரில் ஓட்டல் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடுபோனது.
கரூர் மணவாடி அடுத்த கத்தாளப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (33) .இவர் கடந்த 7-ஆம் தேதி தாந்தோணிமலையில் உள்ள ஒரு ஓட்டல் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.